நடிகை மஞ்சு வாரியர் புகார் - பிரபல இயக்குநர் கைது

சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் பேரில்...

Update: 2022-05-06 06:29 GMT
நடிகை மஞ்சு வாரியர் புகார் - பிரபல இயக்குநர் கைது

சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் பேரில், இயக்குனர் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், பத்ரம், கன்மதம், ஒடியன், உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, இயக்குனர் சனல்குமார் சசிதரன்  மஞ்சு வாரியர் நடித்த 'கயட்டம்', 'செக்ஸி துர்கா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், மஞ்சு வாரியர் நேற்று கொச்சி போலீசில் ஒரு புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் இயக்குனர் சனல்குமார் சசிதரன் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, சனல்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்