ஓபிஎஸ் அனுப்பிய திடீர் கடிதம்... ஷாக் ஆகிப்போன ஈபிஎஸ்

Update: 2024-03-17 03:29 GMT

தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகவும், அதன் பதவி காலம் 2026 ஆண்டு வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோத பொதுக்குழுவை கூட்டி, பல்வேறு சட்டவிரோத தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் விளைவாக அவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு சிவில் வழக்குகள் தற்போது நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சிவில் வழக்குகளால், இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடுமோ என அச்சப்படுவதாகவும், எனவே, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், 2024 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு படிவம் ஏ மற்றும் பி-ல் கையெழுத்திடும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்