அண்ணாமலை விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Annamalai

Update: 2024-09-09 16:12 GMT

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி ஒருவர் தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை 2022இல் கூறியிருந்தார். இது தொடர்பாக அண்ணாமலை மீது பியூஷ் மனுஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சேலம் நீதின்றத்தில் பதிவான வழக்கிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசை இடையீட்டு மனுதாரராக சேர்க்க கோரிய அண்ணாமலையின் மனுவுக்கு பதில் அளிக்குபடி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்