SPB-யின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்.. "அவரோட வாய்ஸ் தான் சந்தோசம்" - நினைவிடத்தில் குவிந்த ரசிகர்கள்

Update: 2024-09-25 13:50 GMT

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்யொட்டி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் எஸ்பிபியின் நினைவிடத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஆனால் கட்டுமான பணிகள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முறையான அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் ஏமாற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர். சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த எஸ்பிபியின் போஸ்டருக்கு மாலை அணிவித்தும் சுற்றுச்சுவர் மீது பூக்களை வீசியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆந்திராவில் இருந்து வந்த ரசிகர் ஒருவர் எஸ்பிபி பாடிய பாடல்களை காகிதத்தில் எழுதி அவற்றை மாலையாக தனது கழுத்திலும், உடலில் அணிவித்தபடி அஞ்சலி செலுத்த வந்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்