பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பதிவிட்ட பாஜக நிர்வாகி -மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Update: 2024-09-26 14:20 GMT

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி, அந்த கருத்துக்களை தமது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி, பாஜக பிரமுகர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு தாரர் தனது செல் போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும், தனது ட்வீட்டை டெலிட் செய்வதோடு, அந்த ட்வீட் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, கடும் நிபந்தனை மற்றும் எச்சரிக்கை விடுத்து முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்