மூதாட்டியின் அரவணைப்பில் பத்திரமாக இருந்த வடமாநில சிறுவன் "கடைசியாக என் கையால் உணவு மட்டும் கொடுக்கட்டுமா ?"

Update: 2024-07-28 18:15 GMT

குமரி மாவட்டம் கடையால் அருகே மலையோர பகுதியான மருதம்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சற்று மனநிலை பாதித்த சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்துள்ளான்.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள், சிறுவனிடம் விசாரித்த போது, இந்தியில் ஏதோ கூறியுள்ளான்..தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை..

அழுக்கான உடைகளுடன் இருந்த சிறுவனை கண்டதும் ஒருவர் தாமாக முன்வந்து அவரை குளிக்க வைத்து உணவு வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்தி தெரிந்த பெண் ஒருவரிடம் சிறுவனை அழைத்து சென்று விசாரித்த போது, அவர் ராஜஸ்தானை சேர்ந்த சுபாஷ் குமார் என தெரியவந்துள்ளது.

16 வயதேயான சிறுவன் ஏதுமறியாமல் சுற்றித்திரிந்ததை கண்டு மனம் பதைபதைத்து போன அந்த பெண் தனது அம்மாவான சுகுமாரி என்பவரின் அனுமதியுடன் தனது வீட்டிற்கு சிறுவனை அழைத்து சென்றார்...

அங்கேயே இரு நாட்களாக சிறுவனுக்கு உணவு, இருப்பிடம் என அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர்...

மூதாட்டியான சுகுமாரியின் அரவணைப்பில் பத்திரமாய் இருந்துள்ளான் சிறுவன்..

மற்றொரு புறம் சிறுவன் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர். இந்த செய்தி, கடைசியில் சிறுவனின் உறவினர்களை சென்றடைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்