மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி

Update: 2024-09-27 11:57 GMT

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் சிலர் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்


இதன் அடிப்படையில் வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் உடண்பாடு ஏற்படாத நிலையில் தன்னுடைய நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக தற்கொலை கடிதத்தை பரணி தலமையிடத்து வட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்துவிட்டு கையில் இருந்த பெட்ரோல் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


தீ காயங்களுடன் மோகன்ராஜ் மீட்ட வளர்த்தி போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்