9 வார கருவோடு போலீஸ் மரணம்.. "போலீஸ்னா ஏன் எல்லாரும் இளக்காரமா பாக்றீங்க" - உலுக்கி எடுக்கும் போலீஸின் கதறல்

Update: 2024-09-05 03:36 GMT

9 வார கருவோடு போலீஸ் மரணம்.. "போலீஸ்னா ஏன் எல்லாரும் இளக்காரமா பாக்றீங்க" - உலுக்கி எடுக்கும் போலீஸின் கதறல்

சென்னையில் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மத்திய குற்ற பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் மேனகா. 9 வார கர்ப்பமாக இருந்த அவர், திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், 29ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், 31ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மேனகாவுக்கு, வைரஸ் மூளை காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காய்ச்சல் அதிகமானதால், சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேனகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து, உறவினர்கள் மற்றும் சக பெண் காவலர்கள் கதறி அழுதனர். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், காவலர் என்று கூறிய பிறகே சிகிச்சை அளித்த‌தாகவும் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்