#BREAKING || எம்.ஆர்.விஜயபாஸ்கர்-க்கு சிக்கல்.. அடுத்தடுத்து பாய்ந்த 6 வழக்குகள்.. சிபிசிஐடி அதிரடி

Update: 2024-07-01 15:22 GMT

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக புகார் உள்ளது.

இந்த நிலையில், பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரியின் அடிப்படையில் மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நபர் என்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் மோசடி செய்தல் உள்ளிட்ட 147, 294(b), 323, 324, 365, 506 (ii) உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாத நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்