பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் விதமாக பொள்ளாச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுகவினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அண்ணாமலை தனது உடலில் சாட்டையால் அடிப்பது போலவும், தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுவதில்லை என்ற வாசங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவினர் ஒட்டி வருகின்றனர்.