நிலத்தகராறு - மூதாட்டி மீது கொலைவெறித் தாக்குதல்

Update: 2024-08-15 15:20 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே, நிலத் தகராறில் மூதாட்டி ஒருவரை நபர் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு எல்லாப்பிள்ளையார் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 4 சென்ட் நிலத்திற்காக ஏற்பட்ட தகராறில் மூதாட்டி செவத்தம்மாளை அவரது உறவினரான குமார் தாக்கி இருக்கிறார். நிலப்பிரச்சினையில் குமாரின் மனைவியை மூதாட்டி தாக்கியதால் அவரை குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பதற வைக்கும் வீடியோ காட்சியின் அடிப்படையில் குமார் உட்பட இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்