"அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து துரைசாமியை நீக்கிடுக" - வைகோவுக்கு பரபரப்பு கடிதம்

Update: 2023-05-02 14:40 GMT

திருப்பூர் துரைசாமியை ம.தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு, துணை பொது செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், திருப்பூர் துரைசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். எனவே, அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்