"போலீஸ் ஸ்டேசனுக்கு பெட்ரோல் பாம் வீச திட்டம்" - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2022-11-11 08:54 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செந்தில் நகர் பகுதியில், வீடுகளில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டியதாக ஒருவர் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. மேலும் பெட்ரோல் குண்டு வீசுவது குறித்து சிறையிலேயே திட்டம் தீட்டியதாக அவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோவில் பேசிய நபர் யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்