அதிமுக போராட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் புகைப்படம்..! - விருத்தாசலத்தில் சுவாரஸ்யம்...

Update: 2022-07-25 15:34 GMT

மின் கட்டண உயர்வுக்கு எதிராக விருத்தாசலத்தில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பயன்படுத்தப்பட்ட கொடியில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே மின்கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழி தேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் பயன்பபடுத்தப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்