மனைவியுடன் தகாத உறவு.. நடந்துசென்றவருக்கு கத்திக்குத்து - பழிதீர்த்த கணவன்

Update: 2023-01-28 00:15 GMT

மதுரையில், பழிக்குப்பழியாக, நடந்து சென்ற இளைஞரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


சம்பட்டிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்ட ராஜா என்பவர், காளவாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் மணிகண்ட ராஜாவை கத்தியால் சரமாரி குத்தி விட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதுதொடர்பான விசாரணையில், மணிகண்ட ராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே, தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனை அந்த பெண்ணின் கணவரான முத்துராஜா மணிகண்ட ராஜாவின் பெற்றோரை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்ட ராஜா, சில தினங்களுக்கு முன்பு, முத்துராஜாவை அரிவாளால் கொலை செய்ய முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.


அதற்கு பழிக்கு பழியாக முத்துராஜா, தனது நண்பர் ஆறுமுகம் உட்பட மூன்று பேருடன் மணிகண்ட ராஜாவை கத்தியால் குத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முத்துராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்