வெளுத்து வாங்கும் கனமழை...அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்...

Update: 2023-07-09 06:04 GMT

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூரில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன.

கனமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதே நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்த‌தால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கினர்.

கல்வித்துறை அலுவலக வளாகத்தில் சூழ்ந்த மழைநீரில், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் கார்களை உரிமையாளர்கள் மீட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்