பெருமாள் கோவிலுக்கு புதிய சுவாமி சிலைகள் அனுப்பிய துர்கா ஸ்டாலின்

Update: 2023-04-23 16:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு ஸ்ரீதேவி பூதேவி சிலைகளை துர்கா ஸ்டாலின் அனுப்பி வைத்தார். சந்தூர் கிராமத்தில் தொழிலதிபர் சஞ்சய் குமார் நவநீதா தீக்ஷித் குடும்பத்தினரால் நிறுவப்பட்டு வரும் அனந்த பெருமாள் கோவிலுக்கு ஸ்ரீதேவி பூதேவி தெய்வங்களை அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, சென்னை பெருமாள் ஸ்தபதி சிற்பக்கூடத்தில் இருந்து சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சுவாமி சிலைகளுக்கு பூஜை செய்து அனுப்பி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்