ஆதரவற்ற மூதாட்டி மீட்பு உறவினர்களிடம் ஒப்படைப்பு -சார்பு ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2022-12-06 03:19 GMT

காரியாபட்டியில் ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்த சார்பு ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி என்ற ஆதரவற்ற மூதாட்டி, காரியாபட்டி பேருந்து நிலைய நிழற்குடையில், வசித்து வந்தார்.

இதுகுறித்து அறிந்த சார்பு ஆய்வாளர் அசோக்குமார், மூதாட்டிக்கு மொட்டை அடிக்கவும், அவரை குளிப்பாட்டவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மூதாட்டிக்கு புத்தாடை வழங்கிய அவர், உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் மூதாட்டியை ஒப்படைத்தார்.

சார்பு ஆய்வாளரின் செயல், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்