பேருந்து மேற்கூரையில் ஏறி மல்லாந்து படுத்து பயணம் - போதை இளைஞர்களின் மோசமான செயல்

Update: 2022-10-26 02:42 GMT

சென்னையில் தீபாவளியன்று போதையில் இருந்த சில இளைஞர்கள், பேருந்தின் மேற்கூரையில் படுத்து சாகசம் செய்துள்ளனர்.

பிராட்வேயில் இருந்து எண்ணூர் வரை செல்லும் அந்தப் பேருந்தில், போதையில் இருந்த சில இளைஞர்கள், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும் ஜன்னலின் பக்கவாட்டை பிடித்து ஏறியபடியும் வந்தனர்.

அதிலும் இருவர் பேருந்தின் மேற்கூரையின்மேல் ஏறி படுத்தே பயணம் செய்தனர். இவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்