அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து...அடுத்து நடந்த சோக சம்பவம் செங்கல்பட்டு அருகே பயங்கரம்..

Update: 2023-06-18 03:15 GMT

மதுராந்தகம் அருகே அரசு விரைவு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன்... இவர் ஆற்று மணலை சென்னையில் இறக்கிவிட்டு ஊர் திரும்பியபோது, ஈ.சி.ஆர் விளம்பூர் கிராமத்தில் அரசு பேருந்தின் மீது இவர் ஓட்டிய லாரி மோதி உள்ளது. இதனிடையே, லாரியின் பின்புறம் மற்றொரு அரசு விரைவு பேருந்தும் மோதி உள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்