206 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா-உக்ரைன்

Update: 2024-09-16 00:06 GMT

ரஷ்யாவும் உக்ரைனும் 206 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குர்ஸ்க் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட 103 ரஷ்ய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈடாக 103 உக்ரைன் போர்க் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைத்து ரஷ்ய வீரர்களும் தற்போது பெலாரஸில் உள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பரிமாற்றம் சாத்தியமாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்