மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

Update: 2024-09-16 13:08 GMT

ஒடிசாவில் மாட்டிறைச்சி சமைத்ததற்காகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள பரலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி விடுதியில் இருந்து 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்