போர் பதற்ற சூழலில் ஈரான் பிரதமருடன் மோடி நேருக்கு நேர்

Update: 2024-10-23 03:07 GMT

போர் பதற்ற சூழலில் ஈரான் பிரதமருடன் மோடி நேருக்கு நேர்

ஈரானின் ஒன்பதாவது பிரதமராக மசூத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடியுடன் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஈரான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு மசூத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஈரானுடனான பழமையான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருதரப்பு உறவுகளின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். பிராந்திய இணைப்பு, பொருளாதார கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கு முக்கியமாக இருக்கும் சபஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற முக்கிய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக வெளியுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்