செய்வதையும் செய்துவிட்டு உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்.. அதிர்ச்சியில் மொத்த உலகம்

Update: 2024-05-28 04:06 GMT

தெற்கு காசாவில் உள்ள பொதுமக்கள் இடம் பெயர்ந்துள்ள ரஃபா பகுதியில், இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஃபாவில் வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது, பொதுமக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது அல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக ரஃபா தாக்குதல் தவறாக சென்றுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்