இந்தியர்களை மீட்க உதவி வரும் நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க உதவிவரும், ருமேனியா, ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-01 02:34 GMT
ருமேனியா பிரதமர் நிகோலே சூகா(Nicolae Ciuca) மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் எட்வர்ட் ஹீகர்(Eduard Heger) உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார். அப்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தனது கவலையை தெரிவித்துக்கொண்டார். மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் முக்கிய பங்காற்றியதற்காக, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய அமைச்சர்கள் ருமேனியா, ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு நேரில் வர உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்திய அமைச்சர்கள் தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் ஸ்லோவாக்கியா, ருமேனியா பிரதமர்களிடம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்