இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனரா? போலந்து எல்லையில் மாணவர்கள் தாக்கப்படும் காட்சி

நாடு திரும்ப முயன்ற மாணவர்கள் மீது தாக்குதல் - உக்ரைன் போலீசார் தாக்கியதாகத் தகவல்.

Update: 2022-02-28 05:46 GMT
நாடு திரும்ப முயன்ற இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் தாக்கியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் நாடு திரும்ப முடியாமல் அச்சத்துடன் பதுங்குக் குழிகளில் பதுங்கியுள்ளனர். உக்ரைனை விட்டு தப்ப போலந்து எல்லைக்கு விரைந்த இந்திய மாணவர்களை, திரும்பவும் உக்ரைனுக்குள் செல்லுமாறு கண்டித்து உக்ரைன் போலீசார் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்