இந்தியர்கள் உக்ரைன் எல்லையை கடக்க சிறப்பு ஏற்பாடு - உதவிக்கு வாட்ஸ் அப் எண்கள் வெளியீடு | Ukraine |

இந்தியர்கள் உக்ரைன் எல்லையை கடக்க சிறப்பு ஏற்பாடு

Update: 2022-02-28 03:09 GMT
உக்ரைனில் இருந்து போலந்து வழியாக மீட்கப்படும் இந்தியர்களுக்கு, உக்ரைன் எல்லையை கடக்க, பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் இருந்து போலந்து வழியாக தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு, எல்லையை கடக்க ஏதுவாக, உக்ரைன் எல்லையான ஷெஹினியில் இன்று முதல் 10 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உதவிகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்