கடைக்கு போன கேப்பில் வீட்டை சூறையாடிய கும்பல்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி

Update: 2024-10-21 02:06 GMT

கடைக்கு போன கேப்பில் வீட்டை சூறையாடிய கும்பல்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி | விழுப்புரம்


வீட்டு உரிமையாளர் கடைக்கு சென்றிருந்த போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், நகை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நடத்துநர் ஆறுமுகம், மனைவியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அவரது மகன் பாலாஜி, வீட்டை பூட்டிக்கொண்டு அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்றபோது, மர்ம நபர் ஒருவர், பின்வாசல் வழியாக தப்பியோடியுள்ளார். வீட்டில் ஆய்வு செய்தபோது, பீரோவிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டின் முன்பு இருந்த மின் விளக்கை கழற்றி வைத்துவிட்டு, கள்ளச் சாவி மூலம் கதவுகளை திறந்து, மர்ம நபர் திருடியதும் தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்