"பெண்களை பார்த்தாலே கொன்று விடுவான்.." - நடுங்க விட்ட சம்பவம்

Update: 2024-07-10 15:23 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், T - கொசப்பாளையத்தில் உள்ள வாக்குசாவடி மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வாக்களிக்க வந்த கனிமொழி என்ற பெண்ணை, அவரது கணவரான ஏழுமலை என்பவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தம்பதி இருவரும் கருத்துவேறுபாடால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாக்குச்சாவடி மையத்தில் இருந்த தப்பியோடிய ஏழுமலையை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏற்கனவே இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் ஏழுமலை சிறைக்கு சென்று வெளியே வந்திருப்பது தெரியவந்தது. இதனிடையே, கனிமொழியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள், அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்