``என்கவுண்டர்ல போடாம விட மாட்டோம்’’ - கேட்டதிலிருந்து தூக்கம் தொலைத்து கதறல்.. தினந்தினம் நரகம்

Update: 2024-10-05 09:31 GMT

கன்னியாகுமரி மாவட்டம், காற்றடி தட்டு பகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுயம்புலிங்கம் வீட்டில் இருந்து ஆயுதங்களை கைபற்றிய ஈத்தாமொழி போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் நிபந்தனை ஜாமீன் பெற்ற சுயம்புலிங்கம், தினமும் ஈத்தாமொழி காவல்நிலையத்தில், நீதிமன்ற உத்தரவுபடி கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற சுயம்புலிங்கத்தை, அங்கு வந்த தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சகி, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது கணவரை சுட்டுக் கொல்லாமல் விடமாட்டோம் என்று தனிப்படை போலீசார் மிரட்டியதாகவும், தனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்