19 வயது நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் - கொதித்தெழுந்த மக்கள்.. வேலூரில் அதிர்ச்சி

Update: 2024-09-08 16:37 GMT

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் பாபு. இவர், மருத்துவமனை பயிற்சிக்காக வந்த, 19 வயது நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில், மருத்துவர் மீதான புகார் உறுதியானதை அடுத்து, திருச்சியில் தலைமறைவாக இருந்த பாபுவை இரு நாள்களுக்கு முன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகம், மருத்துவர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்