ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டி கொலை - தடுத்த மனைவிக்கும் பயங்கரம்

Update: 2024-09-23 04:34 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில் இருக்கும் வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 4 பேர், சுரேஷை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததுடன், தடுக்க வந்த அவரது மனைவி ராகினியையும் காலில் வெட்டியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராகினி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு தலைவெட்டி சந்துரு கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்