சொல்லி சொல்லி பார்த்து கேட்காத அதிகாரிகளை அலறவிட்ட மக்கள் - ஓடோடி வந்து உடனடி ஆக்சன்

Update: 2024-07-04 02:34 GMT

சொல்லி சொல்லி பார்த்து கேட்காத அதிகாரிகளை அலறவிட்ட மக்கள் - ஓடோடி வந்து உடனடி ஆக்சன்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மின்வாரிய ஊழியர்களை கண்டித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இனாம் சமயபுரம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெடித்த மின்மாற்றியை மாற்றி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமாக இருந்ததாக

கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 500க்கும்‌ மேற்பட்டோர் ஒன்று திரண்டு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மின் வாரிய ஊழியர்களை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து

சம்பவ இடத்திற்கு போலீசாரால் வரவழைக்கப்பட்ட மின் வாரிய அலுவலர்கள், உடனடியாக மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்