காணாமல் போன டூவீலர் பற்றி விசாரிக்க காரில் வந்த நபர்..கடைக்காரர் சொன்ன ஒரு பதில்

Update: 2024-07-02 06:29 GMT

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வரும் சரவணன் மீது காரில் வந்த 4 பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை காணவில்லை, யாரேனும் எடுத்துச்சென்றார்களா என காரில் வந்தவர்கள், சரவணனிடம் விசாரித்துள்ளனர். அதற்கு சரவணன், திருட்டு பொருள்களை தாங்கள் வாங்குவதில்லை என்று கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேரும் சரவணன் மற்றும் அவரது தந்தையை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்