திருச்சி மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் - வெளியான முக்கிய அறிவிப்பு | Trichy | CM Stalin

Update: 2024-09-21 06:46 GMT

திருச்சியில் 17 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்

தனியார் சொகுசு பேருந்துகள் நிற்க புதிய பேருந்து

நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

திருச்சியில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக ஏற்கனவே உள்ள 2 பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தற்போது பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்துக்கள் நிற்க சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 17 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்