வீட்டுக்குள் பார்க்க கூடாத வேலையை பார்த்த குடும்பம்... சிதறிய உடல்கள் -நினைத்து பார்க்காத கொடூர சாவு

Update: 2024-10-09 06:08 GMT

தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 2பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில், வீட்டில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சத்தியப்பிரியா மற்றும் 9 மாத குழந்தை உட்பட மூவர் உடல் சிதறி உயிரிழந்தனர். விசாரணையில், பட்டாசு கடை நடத்தி வரும் சத்தியப்பிரியாவின் சகோதரர் சரவணன் சட்ட விரோதமாக சகோதரி வீட்டில் வைத்து இந்த வெடி தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரை மட்டமான நிலையில், எதிர் புறமாக இருந்த 20 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. சம்பவ இடத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில், இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்