"வீட்டுக்குள் வந்து சென்ற போலீசார்... அதன் பின் நடந்த அதிர்ச்சி" - பரபரப்பை கிளப்பிய பெண்

Update: 2024-10-26 05:05 GMT

வீட்டுக்குள் வந்து சென்ற போலீசார்... அதன் பின் நடந்த அதிர்ச்சி" - பரபரப்பை கிளப்பிய பெண்

திருப்பூரில் வீட்டில் சோதனையிட்ட போலீசார் 20 சவரன் நகையை திருடிவிட்டதாக பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணபதிபாளையத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கடை ஒன்றில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பாக்யராஜ் என்பவரை கைது செய்தனர். மறுநாள் பாக்யராஜ் தாயார் வள்ளித்தாயை அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் தன்னையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றுவிட்டதாகவும், வீடு திரும்பி வந்தபோது 20 சவரன் நகையை காணவில்லை, அதனை போலீசார் எடுத்துக் கொண்டனர் என குற்றம் சாட்டியுள்ளார். புகார் தெரிவித்து யாரும் ஏற்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்