"போலீஸ் ஸ்டேஷன் தான் காரணம்.." "40 வருஷமா இது தான் நிலை.."குழந்தைகளை கடிக்கும் விஷ பூச்சிகள்...

Update: 2024-10-16 08:55 GMT

திருப்பூரில் பெய்த கனமழையால் பழவஞ்சிபாளையம் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் கடுமையாக அவதி அடைந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் விஷ பூச்சிகள் கடிக்கும் அபாயம் இருப்பதாகவும், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்