கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - வைரலாகும் வீடியோ..

Update: 2024-10-20 11:24 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சேயூர் அருகே உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள தடுப்பணைகள் நிரம்பியதால், சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியது. அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்