தமிழகத்தில் டாய்லெட்டுக்குள் நுழைந்து கர்நாடகாவில் வெளியே வந்த நபர்.. பார்த்து மிரண்ட போலீஸ்

Update: 2024-10-09 10:02 GMT

திருப்பத்தூரில் போலீசாரிடம் இருந்து தப்பிய திருடன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சிவசேனன். இவர் நாட்றம்பள்ளி அருகே ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்தார். அப்போது, அக்கம்பக்கத்தினர் சிவசேனனை பிடித்து, தருமஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிவசேனன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கழிவறை செல்வதாக கூறி சென்ற சிவசேனன், கழிவறையில் இருந்த ஜன்னல் வழியாக தப்பி சென்றார். இதனையடுத்து, ஒரு வாரமாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கர்நாடகாவில் வைத்து சிவசேனனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்