அரசு ஆபீஸ்-ல் 15 ஆண்டுகளாக மெகா கைவரிசை காட்டிய பெண்..திடீர் மாயம்.. கிளம்பிய சந்தேகம்

Update: 2024-09-20 08:27 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கனிம வளத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாய பணத்துடன் தலைமறைவான ஒப்பந்த பெண் ஊழியர் தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வருகின்றனர். 15- ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 27-ம் தேதிக்குப் பின், பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், குவாரி உரிமையாளர்களிடம் அதிக பணம் பெற்று குறைவான பணம் பெற்றதாக வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள், ஆவணங்களை சரிபார்த்து மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்