செல்போனை உடைத்த இளைஞரை கொலை செய்த சிறார்கள்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

Update: 2024-07-06 02:03 GMT

செல்போனை உடைத்ததால்... இளைஞரை தாக்கி உயிரோடு புதைத்து கொன்ற மூன்று சிறுவர்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். மீனவரான இவரை திடீரென காணவில்லை எனக்கூறி அவரது தாயார் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 சிறார்கள் உட்பட நால்வரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நால்வரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறார்களை தாக்கி அவர்களின் செல்போனை மாரிசெல்வம் உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறார்கள், அதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் என்பவருடன் சேர்ந்து மாரிசெல்வத்தை மது அருந்த அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால்

மாரிமுத்துவை சரமாரியாக வெட்டிய நால்வரும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிமுத்துவை உயிரோடு மண்ணின் புதைத்ததாக தெரிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறார்கள் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து இளைஞரின் உடலை தோண்டி எடுத்த போலீசார், உடலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்