போலீசாரையே அதிர வைத்த இருவர்... இளைஞர்களால் வெளியான பெரும் உண்மை... திருவாரூரில் பரபரப்பு

Update: 2024-07-01 14:10 GMT

திருவாரூரில் போலீசார் போல் நடித்து, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள பாலையூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். தன் நண்பருடன் சேர்ந்து காரைக்கால் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த இவரை, பேரளம் காவல்நிலைய போலீசார் போல் வழிமறித்து இருவர் பணம் பறித்திருக்கின்றனர். இருவரின் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பிரவீன் குமார், இது குறித்து பேரளம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் சிசிடிவிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பணப்பறிப்பில் ஈடுபட்டது ஜீவன் ராஜ் மற்றும் மதன் ராஜ் ஆகிய இருவர் என்பது தெரியவர, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் 5 வருடங்களுக்கு முன் ஊர் காவல் படையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக தங்களை போலீசார் எனக்கூறி இருவரும் பொதுமக்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், பைக்கில் வரும் இளைஞர்களை மறித்து வெளி மாநில மதுபாட்டில்களை பறித்து வந்ததும் தெரியவர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்