மாணவியிடம் சேட்டை... தீயாய் பரவிய மண்டியிட்ட ஆசிரியரின் வீடியோ, ஆடியோ - சுடசுட விருந்து வைத்த போலீஸ்

Update: 2024-09-19 06:34 GMT

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்த போலீசார், ஆசிரியரை தாக்கிய 6 பேரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தனக்கரசு என்ற ஆசிரியர் 12-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஆசிரியர் மாணவியிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆசிரியர் தனக்கரசுவை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஆசிரியர் தனக்கரசை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் ஆசிரியரை தனியே அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்திய 6 இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்