தூர்வாருவது போல் குளத்தில் நடந்த கேடி வேலை -கொந்தளித்த இளைஞர் -திருவள்ளூரில் பரபரப்பு

Update: 2024-09-22 05:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவபுரம் பகுதியில் மண் அள்ளுவதை தட்டி கேட்ட இளைஞர்கள் மற்றும் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீரராகவபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா. இவரது கணவர் ஸ்ரீ முருகா, அப்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாருவது போன்று, மண் அள்ளி சட்டவிரோதமாக விற்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர், ஜேசிபி இயந்திரத்தின் சாவியை பிடுங்கி உள்ளனர். இதனால், கோபமடைந்த ஸ்ரீ முருகா அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்