சொடக்கு போடுற நேரத்தில் மேல் பாக்கெட்டில் போனை திருடிய நபர்.. ஹேய் எப்புட்றா என மிரள வைக்கும் சிசிடிவி

Update: 2024-09-19 07:54 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நூதன முறையில் செல்போன் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவக்குமார். இவர், சி.எல்.சாலையில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது, கேசவக்குமாரின் பாக்கெட்டில் இருந்த விலையுயர்ந்த செல்போனை நோட்டமிட்ட மர்ம நபர், நூதன முறையில் திருடிச் சென்றார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் திருடுபோன காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாக, புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்