ஒரே இரவில் 20 இடங்களில் மண் சரிவு - அதிர்ந்த தமிழகம்

Update: 2024-10-23 07:14 GMT

ஒரே இரவில் 20 இடங்களில் மண் சரிவு - அதிர்ந்த தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் பெய்த மழையால் மண் மற்றும் கல் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருந்து புதூர் நாடு செல்லும் சாலையில் 20 இடங்களில் ஆங்காங்கே மண் மற்றும் கல் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் களத்தில் நின்று ஜேசிபி எந்திரம், புல்டோசர் எந்திரம் கொண்டு மண் சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் வாகனம், அரசு பேருந்து உள்பட பல்வேறு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்