திருச்செந்தூர் கோயிலில் அலைமோதிய கூட்டம் பெண்கள் காவடி ஆட்டம்... பக்தர்கள் பரவசம்

Update: 2024-09-23 05:56 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதன் அடிப்படையில் விடுமுறை நாளான நேற்று, அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து கலைக் குழுவினர் கோவில் முன்பு காவடி ஆட்ட நிகழ்வை அரகேற்றினர். மேளதாள முழங்க பெண் பக்தர்கள் காவடி எடுத்து ஆடிய நிகழ்வு, சுற்றி நின்றிருந்த பக்தர்கள் இடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்