குளமாக மாறிய கோவில் வளாகம் தண்ணீரில் மிதந்தபடி சாமி ஊர்வலம்

Update: 2024-10-23 12:20 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நேற்று மாலை பெய்த கனமழையினால், சங்கரநாராயணர் கோவிலில் மழைநீர் உள்ளே புகுத்ததால், கோவில் வளாகம் முழுவதும் குளம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு நடுவே, மழை தண்ணீரில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருந்த சாமி சப்பரத்தை சுற்றி தண்ணீர் சூழந்ததால், தண்ணீருக்கு நடுவே சப்பர வீதி உலா நடைபெற்றது. கோவில் ஊழியர்கள் விடிய, விடிய மழைநீரை வெளியேற்றியுள்ளதால் இன்று பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்