திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் - தென்காசியில் பரபரப்பு

Update: 2024-10-18 10:32 GMT

சாம்பவர்வடகரை பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் திமுக கவுன்சிலராக இருப்பவர் ரபீக்ராஜா. இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அப்துல் சமது என்பவர், கடை முன்பு ஏற்கனவே இருந்த இரும்பு பாலத்தை எடுத்துவிட்டு தனது சொந்தச் செலவில் கான்கிரீட் பாலம் அமைக்க, கடந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானம் நிறைவேற்றி, சிறு பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பாலம் கட்டும் வேலை தொடங்கியபோது, வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா, இந்த ஓடையில் பாலம் போடுவதற்கு அனுமதி இல்லை என்றும், அனைத்து சமுதாய மக்களும் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், 8-வது வார்டு திமுக கவுன்சிலர் சுடலைமுத்து, தனிப்பட்ட விரோதத்திற்காக அரசு திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என்றும், பாலம் கட்டுவதை யாரும் எதிர்க்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்